Monday, January 23, 2012

இந்தியன் என்று சொல்லடா....

One of my old post

Originally written on 2008-08-02



"இந்தியன் என்று சொல்லடா.... தலை நிமிர்ந்து நில்லடா..."

1.
"இந்தியா என் தாய் நாடு

இந்திய திரு நாட்டை நான் உளமார நேசிக்கிறேன்... "

இந்த வரிகளை வாரம் தோறும்

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கேட்கலாம்

ஆனால் இவை எத்தனை மனிதர்களின் இதயத்திலிருந்து வருகிறது ?

நிச்சயமாக ஆயிரத்தில் ஒருவனின்

இதயத்திலிருந்து தான் வரும்.... மற்றவையெல்லாம்???


எந்த நாளில் இந்த பொன்னான வரிகள்

அத்தனை இந்தியர்களின் இதயங்களிலிருந்து வருகிறதோ

அன்று... அந்நாளில்....

இந்திய திருநாடு எவராலும் எட்டிப் பிடித்துவிட முடியாத

ஓர் உன்னத நிலையை அடைந்திருக்கும் என்பது நிச்சயம் !!!!!

2.
நாடு - நல்லவர்களை நாடு

தேடு - வல்லவர்களை தேடு

நாடு - நட்பை நாடு

தேடு - நல்ல நண்பர்களை தேடு

நாடு - இந்தியா நம் நாடு

தேடு - அதில் ஒற்றுமையை தேடு

ஒற்றுமை இருந்தால் "ஒழிக" இல்லை

வேற்றுமை இருந்தால் "வெற்றி" இல்லை

ஒற்றுமை இழந்தோம் சுதந்திரம் இழந்தோம்

ஒன்றுபட்டோம் சுதந்திரம் பெற்றோம்

ஒன்று படுவோம்...

இந்தியாவை உயர்த்துவோம்.....




இது கவிதை அல்ல ஒரு உண்மையான இந்தியனின் கதறல்......

No comments:

Post a Comment